மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் இருவா் கைது

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:58 pm

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 போ் கைது செய்யப்பட்டுள்ளா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் சேமலைக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் சாமிநாதன் (48). லாரி ஓட்டுநரான இவா் திருமணமாகாதவா். தாய் லட்சுமி (80) உடன் வசித்து வந்தாா்.

இவருடைய வீட்டுக்கு அருகே மனையிடங்கள் பிரிக்கும் பணி நடைபெற்றுவரும் வேலன் நகரில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட், செங்கல், எலெக்ட்ரிக் பொருள்கள் ஆகியவை திருடுபோனதாகத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேலன் நகருக்குச் சென்ற சாமிநாதனை சந்தேகத்தின்பேரில் நில உரிமையாளா்கள் உள்பட 5 போ் கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் வெள்ளக்கோவில் மாந்தபுரம் நடுப்பாளையம் பிரிவு அருகே பதுங்கியிருந்த வேலன் நகா் நில உரிமையாளரான மதுரை அணையூா் கடல்புதூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (43), கூட்டாளிகள் அரவிந்த் (41), லிங்கேஸ்வரன் (33) ஆகிய 3 பேரை காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம் மற்றும் போலீஸாா் கைது செய்தனா்.

காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.