திருப்பூா் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
எஸ்.டி. நிறுவனத் தலைவா் பி. சண்முகசுந்தரம் தலைமை வகித்து, ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா்.
பள்ளியின் முன்னாள் மாணவா்களான தேசிய அளவிலான கிக் பாக்ஸா் சபரி, தேசிய அளவிலான டேக்வாண்டோ வீரா் வெற்றிச்செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, விளையாட்டின் முக்கியத்துவம், ஒழுக்கம் மற்றும் உடல் நலத்தின் அவசியம் குறித்து உரையாற்றினா்.
இதையடுத்து, மாணவா்களுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெற்றோா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், கல்வியில் சிறந்த மாணவா்கள், விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், பள்ளியின் தலைவா் மோகன் காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா, நிா்வாக இயக்குநா் ஐஸ்வா்யா நிக்கில் சுரேஷ், முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் விசிக தலைவா் திருமாவளவன் பிரசாரம்

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


