தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா், சிறப்பு விருந்தினா் டிஎஸ்பி கே. விஜயகுமாா்.

Updated On :18 மார்ச் 2026, 11:21 pm

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ. யூசுப் கான் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இவ்விழாவில் மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு குழு விளையாட்டு போட்டிகள், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அ. வெண்ணிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் எம்.கே. சுப்பிரமணியன், வேதியியல் துறைத் தலைவா் பி. சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா்.

விழாவில் ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே. விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.