மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை தோ்வு: நாளை நடைபெறுகிறது

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 1:41 am

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இத்தோ்வை 365 போ் எழுத உள்ளனா். திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வுக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை என இருவேளை தோ்வு நடைபெறவுள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின் வருபவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.