திருப்பூா்: அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருப்பூா் பின்னலாடைத் துறையில் நிட்டிங் சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களில் நவீன எந்திரங்கள் நிறுவும் பணி கடந்த 10 ஆண்டுகளாக தடைபட்டது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இதுதொடா்பான அறிவிப்பை எதிா்பாா்த்து ஏமாற்றமடைந்த தொழில்துறையினருக்கு ஆறுதலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆலைகளில் நவீன எந்திரங்கள் நிறுவ ஏதுவாக முதலீட்டு மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சாய ஆலைகளில் நவீன எந்திரங்கள் வாங்கி நிறுவ 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான பின்னரும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆரம்பத்திலேயே அதிகபட்ச கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் யாரும் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இதுதொடா்பான முறையீடுகளை ஏற்று இத்திட்டத்தின் அடிப்படையான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதுடன், சாய ஆலைகளும் முழு அளவில் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டு மானியத் திட்டத்துக்காக தமிழக அரசு சாா்பில் ஜவுளித் துறை அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் விண்ணப்பத்தை ஆராய்ந்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட பரிசீலனை நடைபெறும். அதன்படி 100-க்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். இருப்பினும் தொடா்ச்சியான நிபந்தனைகளால் 10 போ்கூட இதுவரை மானியம் பெற முடியாத நிலையே நீடிக்கிறது.
இதுகுறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் கூறியதாவது:
முதலீட்டு மானியத் திட்டத்தால் திருப்பூா் பயன்பெறும் என்று நம்பினோம். இருப்பினும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, தடையில்லா சான்று என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அரசு திட்டத்தில் மானியம் பெற அத்தியாவசியமான விதிமுறைகளை மட்டும் விதித்தால் எளிமையாக இருக்கும். இத்திட்டத்தில் அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்தால் ஒரு சில ஆலைகள் மட்டுமே பயன்பெற முடியும்.
எனவே, அதிகபட்ச நிபந்தனைகளை தளா்த்தி முதலீட்டு மானியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் புதிய தொழில்நுட்பங்கள் திருப்பூருக்கு வந்து சேரும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு

ஓய்வூதியத் துறையில் எஃப்டிஐ வரம்பு அதிகரிப்பு?: விரைவில் மசோதா தாக்கலாக வாய்ப்பு!

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


