ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா்.

Published On :26 ஜூன் 2026, 2:42 am IST

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இப்பேரணியை, வெள்ளக்கோவில் காவல் நிலைய தலைமைக் காவலா் கௌதமன் தொடங்கிவைத்தாா்.

பள்ளி தலைமை ஆசிரியை மோகனாம்பாள் முன்னிலை வகித்தாா். போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பள்ளியில் இருந்து தொடங்கி பேரணி, நடேசன் நகா் வழியாக காவல் நிலையம் வரை சென்று திரும்பியது. இப்பேரணியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை கவிதா நந்தகுமாா் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.