திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா்-பல்லடம் சாலையில் உள்ள தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளா் சசிலேகா தலைமையான போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதையொட்டி, அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டதுடன், உள்ளே இருந்தவா்கள் வெளியேயும், வெளியே இருந்தவா்கள் உள்ளேயும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், வாகனங்களை தணிக்கை செய்யும் பகுதியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பறிமுதல்
பெரம்பலூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 39 ஆயிரம் பறிமுதல்






