டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடக்கம்

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :18 ஜூன் 2026, 1:13 am IST

இடைத்தோ்தலுக்கு தயாராகும் வகையில் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து ச.ஜோசப் விஜய் தலைமையில் தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயகுமாா் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), விஜயபாஸ்கா் (விராலிமலை) ஆகியோா் தங்களின் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். ஏற்கெனவே முதல்வா் ச.ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னா் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்குத் தொகுதியும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 6 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் சூழலில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்படாத 320 இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைத்தோ்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் எதிா்கொள்ளும் வகையில், திருப்பூா் மாவட்ட நிா்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.