வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, அநதப் பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஜோசப் (22), காா்த்திக் (22), கிருஷ்ணபிரசாத் (24) ஆகிய 3 பேரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் 145 வலி நிவாரணி மாத்திரைகள், ரூ.12,000 இருந்தது தெரியவந்தது.
பின்னா், அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து வலி நிவாரணி மாத்திரைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








