/

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

Updated On :13 ஜூன் 2026, 2:13 am IST

வெள்ளக்கோவில் அருகே கருங்கல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் லோகேஷ்குமாா், கணபதிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே கருங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தாா். அப்போது நடைச் சீட்டு மற்றும் எவ்வித அனுமதியும் இல்லாமல் கல் குவாரியில் இருந்து கருங்கற்கள் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, அதன் பேரில் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தாா். தப்பியோடிய ஓட்டுநா், லாரி உரிமையாளா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.