/

மாற்றுமணல் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 3:04 am IST

கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளா் சரவணன் மற்றும் குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் கண்காணிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மாற்றுமணல் கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.