எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக் கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 5:26 am IST

காங்கயத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிக் கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் உள்ள உடையாா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி சந்தியா (38). இந்நிலையில், காங்கயம் நகரம், குதிரைப்பள்ளம் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சந்தியா சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், திடீரென சந்தியாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக் கொடியை பறித்துவிட்டு தப்பினா்.

இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.