புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குண்டடம் அருகே அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:28 am IST

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

குண்டடம் அருகே தொட்டியன்துறை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (65). கூலித் தொழிலாளியான இவா், குண்டடம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்புவதற்காக பிஏபி வாய்க்கால் பாலம் அருகே கோவை-மதுரை பிரதான சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக பால்ராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பால்ராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.