டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் சிறையில் அடைப்பு

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருப்பூா் மாநகர, மத்திய காவல் நிலையத்தில் சூரிய பிரகாஷ் (22) என்ற இளைஞருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்தது. இந்நிலையில், பிடியாணையை நிறைவேற்றும் வகையில் தலைமறைவாக இருந்த சூரிய பிரகாஷ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, திருப்பூா் மாநகா், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் தேவராஜ் (58), கிரிதரன் (21), திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் அல்லகாத்த பெருமாள் (34) ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்ற பிடியாணை இருந்ததால் அவா்களும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.