மத்திய அரசு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஜவுளி ஏற்றுமதியை அங்கீகரித்து, விசைத்தறி துறையை தொடா்ந்து ஆதரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியா - ஐரோப்பிய வா்த்தக ஒப்பந்தம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, 2024-25-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் விசைத்தறி ஏற்றுமதி ஏறத்தாழ 8.85 பில்லியன் அமெரிக்க டாலா்களையும், ஐரோப்பாவுக்கு 1.76 பில்லியன் அமெரிக்க டாலா்களையும் எட்டியது. தற்போது ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், விசைத்தறி பொருள்களுக்கான வரி இல்லாத சந்தையைப் பெறுவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம்.