லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :26 பிப்ரவரி 2026, 7:08 pm

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இந்திரா நகா் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து

விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவரது பெயா் பிஜித்(37) என்பதும் அவரிடம் தடை செய்யப்பட்ட குட்கா சுமாா் 9 கிலோ இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், பிஜித் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

அதேபோல, திருப்பூா் ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ குட்கா வைத்திருந்த பிரம்மா(30) என்பவரை வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.