லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

News image

புகையிலைப் பொருள்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவல், நகராட்சி, சுகாதாரத் துறையினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:05 pm

வெள்ளக்கோவிலில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் குழி தோண்டி புதைத்து அழிக்கப்பட்டன.

வெள்ளக்கோவில் சின்னமுத்தூா் பகுதியில் காரில் 60 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததாக தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த ரத்தினபாண்டி (62) என்பவரை போலீஸாா் கடந்த 2025 ஜூன் 23-ஆம் தேதி கைது செய்தனா்.

இது குறித்த வழக்கு காங்கயம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன. வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளைத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் 10 அடி ஆழ குழி தோண்டி, அதில் புகையிலைப் பொருள்களுடன் ப்ளீச்சிங் பவுடா் கலந்து புதைத்து அழிக்கப்பட்டன. அப்போது வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.