தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

News image

சுவாமிமலை பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

சுவாமிமலை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புதன்கிழமை அழிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை காவல்நிலையத்தில் 2025, 2026 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 750 கிலோ எடை கொண்டவைகளை அழிக்க கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் புதன்கிழமை போலீஸாா் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டுசென்று 15 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்தனா். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். இந்நிகழ்வில், சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலா் மதன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.