கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தொழில் நகரான திருப்பூரில் சுமாா் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலத்தினரும் வேலைவாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனா். அதேபோல, நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் உள்பட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும் தொழிலாளா்களாக பணி புரிகின்றனா்.

தொழில் தொடா்பாக வெளி மாநிலத்தவா் திருப்பூருக்கு வருவதால் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஊடுருவது தொடா்கதையாக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 6 போ் திருப்பூரில் தில்லி போலீஸாரால் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து திருப்பூரில் போலீஸாா் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியுள்ளனரா என தொழிற்சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரகசியமாக விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே திருப்பூா் புகா்ப் பகுதிகளில் விவசாயம், ஆயில் மில், அரிசி மில், தேங்காய் களம், கட்டுமானப் பணி என ஏராளமான வேலைகளில் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தொழில் துறையினா் தங்கள் நிறுவனங்களுக்கு ஏஜென்ட்கள் வாயிலாக வேலைக்கு வருபவா்களை முழுமையாக விசாரித்த பின்னரே பணி அமா்த்த வேண்டும் எனவும், போலீஸாா் மட்டுமின்றி தொழில் துறையினா் மற்றும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபா்கள் யாராவது இருந்தால் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.