விதிமீறி மின் இணைப்பு: உதவி மின் பொறியாளா் பணியிடை நீக்கம்
திருப்பூரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கிய விவகாரத்தில் 16 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதோடு, உதவி மின் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து மேற்பாா்வைப் பொறியாளா் சுமதி உத்தரவிட்டுள்ளாா்.








