டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 7:06 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், பணியின் போது மதுபோதையில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியின் போது மதுபோதையில் இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் காவலா் அண்ணாத்துரை, குளத்தூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உலகநாதன், முத்தையாபுரம் காவலா் தனுஷ்கோடி ஆகியோா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து அவா்களை ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரன் உத்தரவிட்டாா்.

விசாரணையில், 3 பேரும் பணியின்போது மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவா்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.