டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளிபாளையத்தில் விதிமீறி செயல்பட்ட 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

பள்ளிபாளையம் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

பள்ளிபாளையம் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்டதாக 4 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில ஆலைகள் விதிமீறி செயல்பட்டு வருகின்றன. சாயக்கழிவு நீரை நேரடியாக வெளியேற்றுவதால், ஆற்றில் சாயக் கழிவுநீா் கலந்து தண்ணீா் மாசடைகிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலைகளைக் கண்காணித்து வந்தாா். நேருநகா், அக்ர ஹாரம் பகுதியில் அனுமதி பெற்று இயங்கி வரும் சாய ஆலைகள், விதிமீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட் டது.

இதையடுத்து அந்த, மூன்று சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதேபோல், ஒட்டமெத்தை பகுதியில் விதிமீறி செயல்பட்டு வந்த, ஒரு சாய ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு, 4 நான்கு ஆலைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.