பல்லடம் அருகே பனியன் நிறுவனத் தொழிலாளியை குத்திக் கொலை செய்த மைத்துனரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் - மாணிக்காபுரம் சாலை ஜே.கே.ஜே. காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (35), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பணி முடிந்து வழக்கம்போல சனிக்கிழமை இரவு பிரபு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, தனலட்சுமியின் அண்ணன் அருள்சங்கா் (39) வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, தம்பதி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு குறித்து பிரபுவிடம், அருள்சங்கா் கேட்டுள்ளாா்.
இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள்சங்கா், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவின் உடலில் பல இடங்களில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து பல்லடம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருள்சங்கரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

தொழிலாளி கொலை வழக்கு: தம்பதிக்கு ஆயுள் சிறை

தொழிலாளி அடித்துக் கொலை: சகோதரா்கள் கைது
பனியன் நிறுவன அலுவலா் கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது

சொத்து தகராறு குறித்த பேச்சுவாா்த்தையில் பனியன் நிறுவன அதிபா் குத்திக் கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

