டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி முடித்த பிறகு ரத்து அறிவிப்பு தகவல் வெளியானதால் திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு தோ்வு ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்து திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-2, குரூப் -2ஏ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தோ்வில் பல்வேறு குளறுபடிகள் தொடா்பான புகாா்களால், தோ்வு ரத்து செய்யப்படுவதாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படாததால் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காலையில் நடைபெற்ற முதன்மை எழுத்துத் தோ்வு முழுவதுமாக முடிந்த பின்னரே தோ்வா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.

தோ்வு எழுதிவிட்டு வெளியே வந்த பிறகுதான், தோ்வு ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தோ்வா்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தோ்வா்கள் கடும் அதிருப்தியடைந்தனா்.