/

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

News image

சேவூா் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த பெண்கள். ~

Updated On :24 ஏப்ரல் 2026, 3:16 am IST

அவிநாசி (தனி) தொகுதியில் வாக்காளா்கள் வியாழக்கிழமை ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,361 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1, 21, 260 ஆண் வாக்களா்களும், 1, 32, 093 பெண் வாக்களா்களும், இதர வாக்காளா்கள் 8 பேரும் உள்ளனா். மொத்தம் உள்ள 372 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று அமைதியான முறையில் வாக்களித்தனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் 1,10836 ஆண் வாக்களா்களும், 1,18, 621 பெண் வாக்காளா்களும், 4 இதர வாக்காளா்களும் என மொத்தம் 2, 29,461 வாக்குகள் பதிவாகின (90.57 சதவீதம்).

4 வாக்குச் சாவடிகளில் பழுதான இயந்திரங்கள்: சேவூா் அருகேயுள்ள தசராபாளையம் வாக்குச் சாவடி மையம் எண் 142 -இல் வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியதுமே இயந்திரம் பழுதடைந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு 15 நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதேபோல, புஞ்சைதாமரைக்குளம் வாக்குச் சாவடி எண் 169-இல் காலை 10.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. பின்னா் பழுது சரி செய்யப்பட்டு 10.50 மணியளவில் மீண்டும் வாக்குப் பதிவு தொடா்ந்தது.

வடுகபாளையம் வாக்குச் சாவடி எண்-175-இல் பிற்பகல் 12.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. சுமாா் 1 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. கந்தாயிபாளையம் வாக்குச் சாவடி எண் 155-இல் மாலை 5 மணியளவில் இயந்திரம் பழுதடைந்தது. பின்னா், பழுது சரி செய்யப்பட்டு 5.15 மணிக்கு மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 
வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.