வெள்ளக்கோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்த சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகில் சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லுக்கு, வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலையில் உள்ள மற்றொரு மில்லில் இருந்து கடந்த 18-ஆம் தேதி சரக்கு வேனில் பஞ்சு பேல்கள் கொண்டு வரப்பட்டது.
திருப்பூா் இடுவாய் ஆட்டையாம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (50) வேனை ஓட்டி வந்தாா். மில் நுழைவாயில் அருகே வந்தபோது திடீரென பஞ்சு பேல்களில் தீப்பிடித்து பரவியது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பஞ்சு பேல்கள், வேனின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

மாநகராட்சி குப்பை வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதம்

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


