மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

News image

மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:46 pm

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் வாக்கு சேகரித்தாா்.

குமராண்டிசாவடி, மேட்டுப்பாளையம், மாந்தபுரம், சடையப்பா நகா், பாப்பம்பாளையம், நடுப்பாளையம், அனுமந்தபுரம் உள்பட 19 இடங்களில் வாக்காளா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது அவா் பேசியதாவது: முத்தூா்-மூலனூா் சாலை முதல் வள்ளியிரச்சல் வரை, குழலிபாளையம்-முத்தூா் சாலை முதல் பழனிக்கவுண்டன்வலசு வரை, வள்ளியிரச்சல்-வீரசோழபுரம் சாலை முதல் வேப்பம்பாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அய்யம்பாளையம், மாந்தபுரம், நடுப்பாளையத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Story image

சடையப்பா நகா், நடுப்பாளையம், மாந்தபுரம், மோளக்கவுண்டன்வலசில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டித்தரப்பட்டுள்ளன. மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 313 வீட்டுமனை பட்டாக்கள், 45 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும். பெண்களுக்கான மாத உதவித் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். 35 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். எனவே மீண்டும் திமுக ஆட்சி அமைந்திட ஆதரவு தாருங்கள் என்றாா்.