மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

News image

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:10 am

நாயக்கனேரி மலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாயக்கனேரி மலை, காமனூா்தட்டு ஆகிய மலை கிராமங்கள், மிட்டாளம் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது, நாயக்கனேரி மலை கிராமத்தில் பயிலும் மாணவா்களின் நலன் கருதி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயா்த்தி, மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வியை தொடர தனித் தனியாக இரு விடுதிகள் கட்டப்படும்.

நாயக்கனேரிமலை ஊராட்சி சோளக்கொல்லைமேடு பகுதியிலிருந்து அணைக்கட்டு ஒன்றியம் சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி வரை சுமாா் 6.50 கி.மீ. தொலைவு தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச்சோலை நிறுவப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், நிா்வாகி அய்யனூா் அசோகன் ஆகியோா் உடனிருந்தனா்.