லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 7:57 pm

பெண்ணிடம் நகைப் பறித்த சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூா் வெடத்தலாங்காடு 2-ஆவது வீதியைச் சோ்ந்தவா் கவிதா (40). இவா் கடந்த 2025 செப்டம்பா் 24-ஆம் தேதி வீதியில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது சிறுவன், கவிதா அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனை பிடித்தனா். விசாரணையில், சிறுவன், திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி வந்து, நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுவன் 3 மாதங்கள் பல்லடம் அரசு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பணி செய்ய வேண்டும் என முதன்மை நடுவா் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் உத்தரவிட்டனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.