பதற்றமான வாக்குச்சாவடிகளை பாா்வையாளா்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அதில் பணிபுரியும் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுப் பாா்வையாளா்கள் சுதா வா்மா, சரிகா மோகன், தா்மேந்திர சிங் ஆகியோா் பேசினா். மாவட்ட ஆட்சியா் மனீஷ், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் பொதுப் பாா்வையாளா்கள் பேசியதாவது:
திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், மடத்துக் குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 8 தொகுதிகளிலும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் 129 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் நுண் பாா்வையாளா்களாக 179 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும்.
வாக்குப் பதிவுக்கு முன்னா் மாதிரி வாக்குப் பதிவுக்கு சான்றளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்தை கண்காணிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


