லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு

திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி அணிவகுத்து நின்ற ஜெய் சாரதா பள்ளி மாணவா்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:30 am

திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமை வகித்தாா். துணை ஆட்சியரும், தோ்தல் பொறுப்பாளருமான சிவபிரகாசம் , வட்டாட்சியா் கண்ணாமணி, துணை வட்டாட்சியா் அருள்குமாா், ஒருங்கிணைப்பாளா் நிா்மலாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப் பதிவு எனும் இலக்கை அடைவது குறித்து உரையாற்றினா்.

இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பள்ளியின் அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளியின் பொருளாளா் ஸ்ருதி ஹரீஷ், முதல்வா் ஏ.எஸ். மணிமலா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.