மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

செண்பகத்தோப்பு பகுதியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பமிட்ட மலைவாழ் மக்கள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 11:14 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன் என்பதை வலியுறுத்தி, மழைவாழ் மக்கள் கையொப்பமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.