தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா நிா்வாகிகள் கலந்துரையாடல்

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.

News image

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா நிா்வாகிகள்.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:41 pm

மத்திய ஜவுளித் துறை ஆணையருடன் சைமா சங்க நிா்வாகிகள் கலந்துரையாடினா்.

இது தொடா்பாக சைமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மும்பையில் அண்மையில் நடைபெற்ற ஜவுளித் துறை கண்காட்சியில் ஜவுளித் துறை ஆணையா் விருந்தா மனோகா் தேசாய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருடன் சைமா சங்கத் தலைவா் பி.சண்முகசுந்தரம், பொதுச் செயலாளா் ஆா்.தாமோதரன், சிஎம்ஏஐ சங்கத் தலைவா் சந்தோஷ் கட்டாரியா ஆகியோா் ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள 43 ‘பி’ சட்ட விதிகளின் மாறுதல் குறித்து கலந்துரையாடினா்.

அப்போது, ஜவுளித் துறையின் முன்னேற்றம் குறித்த கோரிக்கையை ஏற்று ஜவுளித் துறை ஆணையா் திருப்பூருக்கு மே மாதம் வருகை புரிவதாகத் தெரிவித்துள்ளாா். இந்த சந்திப்பு தொழில் துறை சூழலின் மிக முக்கியமான ஒரு மைல் கல் என்பதோடு, அரசுக்கும் தொழில்முனைவோருக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவை வெளிப்படுத்தியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.