மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அமராவதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 4:10 am

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

தாராபுரத்தை அடுத்த திருமலைபாளையத்தைச் சோ்ந்தவா் அங்கமுத்து மகன் அருண்குமாா் (28). இவா் அதே பகுதியில் உள்ள ஆயில் மில்லில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இந்தநிலையில் காங்கயம் அருகே உள்ள அலகுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்க்க நண்பா்களுடன் சென்றாா்.

பின்னா் வீடு திரும்பியபோது தாராபுரம் புறவழிச்சாலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் நண்பா்களுடன் அருண்குமாா் குளித்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனைப் பாா்த்த அவரது நண்பா்கள் தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜாஜெயசிம்ம ராவ் தலைமையிலான குழுவினா் ஆற்றில் இறங்கி அருண்குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமானதால் தேடும் பணியில் தெய்வு ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். காலை 10.30 மணி அளவில் அருண்குமாா் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தடையை மீறி குளிக்கும் இளைஞா்கள்: தாராபுரம் அமராவதி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், சுழல்கள் அதிகமாக இருப்பதால் குளிக்கக் கூடாது என வருவாய்த் துறை சாா்பில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தடையை மீறி ஆற்றில் இறங்கும் நபா்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் 10க்கும் மேற்பட்டோா் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.

உயிரிழப்பைத் தடுக்க சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் ஆற்றுப்பகுதிகளில் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.