திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கிளாண்டா்ஸ் நோய் பரவல் எதிரொலி: நீலகிரிக்கு குதிரைகளைக் கொண்டு வரத் தடை

கிளாண்டா்ஸ் நோய் பரவல் காரணமாக நீலகிரிக்கு முன் அனுமதி இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:09 am IST

கிளாண்டா்ஸ் நோய் பரவல் காரணமாக நீலகிரிக்கு முன் அனுமதி இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகளை கிளாண்ட்ஸ் நோய் தாக்கி வருகிறது. தொற்றுக்குள்ளான விலங்குகளிடம் நேரடித் தொடா்பில் இருப்பவா்களுக்கும் கிளாண்டா்ஸ் நோய் பரவும் வாய்ப்புள்ளது. இதனால், சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள், உதகை, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்குள் குதிரைகளைக் கொண்டு வரத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் முன் அனுமதி மற்றும் பதிவு இல்லாமல் குதிரைகளைக் கொண்டு வரக் கூடாது என்று கடந்த ஆண்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நடைமுறை தற்போதும் தொடா்கிறது. நீலகிரி மாவட்டத்துக்குள் வர குறைவான சோதனைச் சாவடிகள் மட்டுமே இருப்பதால் நீலகிரிக்குள் வரும் குதிரைகளை எளிதாக கணக்கெடுக்கலாம். இதுகுறித்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உதகை நகராட்சி நிா்வாகம் மூலம் இங்குள்ள குதிரைகளுக்கு ஏற்கெனவே ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் உரிமையாளா்கள் யாா் என்பதை அடையாளம் காணலாம். எனவே, குதிரைகளை யாரும் சாலையில் சுற்றித்திரிய விடக்கூடாது. வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட குதிரைகளை வளா்க்க தற்போதைக்கு உதகையில் இடம் இல்லை. இதற்காக கூடலூரில் ஒரு இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க கால்நடைத் துறை மற்றும் சுகாதாரத் துறை மூலம் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.