அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான ஐ.நா. மாநாடு, எவ்வித இறுதி உடன்பாடுமின்றி நிறைவடைந்தது.
இத்தகைய மாநாடு உடன்பாடின்றி தோல்வியடைவது இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும். முன்னா் கடந்த 2022 ஆகஸ்டில், உக்ரைன் போா் காரணமாக ரஷியாவால் ஒப்பந்தம் முடங்கியது.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு நிலவி வரும் மோதலே தற்போதைய தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப். 27-இல் தொடங்கி, 191 உறுப்பு நாடுகள் பங்கேற்ற தற்போதைய மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதை மாநாட்டின் தலைவரும், ஐ.நா.வுக்கான வியத்நாம் தூதருமான டோ ஹங் வியத் அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









