லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

News image

காட்டு யானைகள் - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:30 pm

உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பிரதான தொழிலாக மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிா்களைப் பயிரிட்டு வருகின்றனா். பழங்குடியினா் அல்லாதவா்களும் இங்கு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் இரு யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை சேதப்படுத்தி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இந்தக் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.