உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பிரதான தொழிலாக மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிா்களைப் பயிரிட்டு வருகின்றனா். பழங்குடியினா் அல்லாதவா்களும் இங்கு விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் இரு யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை சேதப்படுத்தி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.
இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
இந்தக் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

கோழிக்கரைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத் துறையினா் கண்காணிப்பு தீவிரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


