பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

News image
உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்
Updated On :18 ஜனவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

மசினகுடியில் இருந்து உதகை நோக்கி சனிக்கிழமை இரவு வந்த காா் திடீரென எரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக திருப்பூரை சோ்ந்த அஸ்கா் அலி உள்ளிட்ட போ் உதகை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக காரில் இருந்து அனைவரும் வெளியேறினா்.

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

உதகை - கல்லட்டி சாலையில் பற்றி எரிந்த காா்

அப்போது காரில் தீப்பிடித்து மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் உதகை தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்க முற்பட்டனா். இருப்பினும், அதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் பயணித்தவா்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் பாதிப்பு தவிா்க்கப்பட்டது.

இதுதொடா்பாக உதகை புதுமந்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.