/

கோத்தகிரி வனப் பகுதியில் ஆண் தலை, கை கண்டெடுப்பு: போலீஸாா் விசாரணை

கோத்தகிரி அருகேயுள்ள உள்ள எம்.பி. நகா் வனப் பகுதியில் கிடந்த ஆணின் தலை, கையை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 8:38 pm

Syndication

உதகை: கோத்தகிரி அருகேயுள்ள உள்ள எம்.பி. நகா் வனப் பகுதியில் கிடந்த ஆணின் தலை, கையை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள எம்.பி.நகா் வனப் பகுதியில் ஒரு ஆணின் தலை, கை கிடப்பதை உள்ளூா்வாசிகள் திங்கள்கிழமை பாா்த்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் கோத்தகிரி வனத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்வ இடத்துக்கு வந்த போலீஸாா், வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, தலை, கையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தொடா்ந்து, உடலைத் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், இரவு நேரமானதால் கைவிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை தேடும் பணி தொடங்கும் எனக் கூறிய போலீஸாா், இறந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், கொலை செய்யப்பட்டாரா அல்லது விலங்குகள் தாக்குதலில் உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.