நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கூடலூா் அருகே புலி தாக்கி கறவை மாடு உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:58 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் கறவை மாட்டை சனிக்கிழமை பகல் நேரத்தில் புலி தாக்கிக் கொன்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள வாச்சிக்கொல்லி பகுதியில் புலி அவ்வப்போது நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வருகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த ரமேஷ் சனிக்கிழமை பகலில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை புலி தாக்கிக் கொன்றது. இதே பகுதியில், அவரது கன்றுக்குட்டியைப் புலி கடந்த 16ஆம் தேதி தாக்கிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.