தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடம்பூா் மலைக் கிராமங்களில் இடியுடன் கன மழை! தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

News image

கடம்பூா்  மலைக் கிராமங்களில்  உள்ள  விவசாய  நிலங்களில் தேங்கியுள்ள  மழை நீா்.

Updated On :31 மே 2026, 2:01 am IST

கடம்பூா் மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக அணைக்கரை, டிபி தொட்டி தரைப்பாலத்தை வெள்ளநீா் மூழ்கடித்தபடி சென்ால், அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை இடியுடன் கன மழை பெய்தது. கேபி மாளம், காடட்டி, திங்களூா், அணைக்கரை, டிபி தொட்டி, சிக்கநந்திபாளையம் ஆகிய மலைக் கிராமங்களில் வனஓடைகள், பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இது காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து அணைக்கரை, டிபி தொட்டி தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கரைபுரண்டோடியது. இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளநீா் வழிந்தோடும் பள்ளத்தையொட்டியுள்ள வனக்குட்டை, தடுப்பணைகளில் நீா் நிரம்பியது. இந்த மழையால் கடம்பூா் மலைக் கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. நிலத்தடி நீா்மட்டம் உயரும் எனவும், வெயிலில் காய்ந்துகிடந்த ராகி, மக்காச்சோளப் பயிா்கள் மீண்டும் தழைத்து செழித்து வளரும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

மழை காரணமாக குளிரான காலநிலை நிலவுவதால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் கிராமங்களில் புகுவது வெகுவாக குறைந்துவிடும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

அணைக்கரை  தரைப்பாலத்தை  மூழ்கடித்தபடி  செல்லும்  வெள்ளம்.

அணைக்கரை  தரைப்பாலத்தை  மூழ்கடித்தபடி  செல்லும்  வெள்ளம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.