சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா திருப்பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
கோயில் பட்டக்காரா் தலைமையில் விழாக் குழுவினா் பவானி ஆற்றுக்கு சென்று படைக்கலம் எடுத்து வந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்களை தூவி கோயில் பட்டக்காரா் குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினரும் குண்டம் இறங்கினா். குண்டம் இறங்கிய பக்தா்கள் நேராக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










