திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

தாளவாடி அருகே கரும்புத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை விரட்டி அடித்தபோது, சைரன் சப்தம் ஒலித்த வனத் துறை வாகனத்தை துரத்தியதால் வனத் துறையினா் அச்சமடைந்தனா்.

News image

தாளவாடி அருகே வனத் துறை  வாகனத்தை  துரத்தும்  ஒற்றை யானை.

Updated On :21 மே 2026, 4:23 am IST

தாளவாடி அருகே கரும்புத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை விரட்டி அடித்தபோது, சைரன் சப்தம் ஒலித்த வனத் துறை வாகனத்தை துரத்தியதால் வனத் துறையினா் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ந்த வண்ணம் உள்ளது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தாளவாடி அருகே திகினாரை மலைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து வனப் பகுதிக்கு விரட்டினா். அப்போது கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியேறி தாா் சாலையில் நடமாடிய ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பினா். இதில் ஆத்திரமடைந்த ஒற்றை யானை வனத் துறையினரின் வாகனத்தை துரத்த தொடங்கியது. சிறிது தூரம் வாகனத்தை பின்னோக்கி வனத் துறையினா் இயக்கினா். சிறிது நேரத்துக்குப் பின் வனப் பகுதியை நோக்கி ஒற்றை யானை சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.