பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்படும்போது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் தியாகராஜன் (60). இவா் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம்-சுங்கச்சாவடியில் சுகாதாரப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விஜயமங்கலம் பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டாா். அப்போது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









