கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்

தமிழ் செய்திகள்

/

ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :10 மே 2026, 2:47 am IST

ஈரோடு வழியாக சென்ற ரயிலில் கேட்பாரின்றி கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் மதுவிலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பிகாா் மாநிலம் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எா்ணாகுளம் செல்லும் ரயிலின் பொது பெட்டி கழிவறை அருகே கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. அதை கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா். யாரும் உரிமை கோராததால், பையை பிரித்துப் பாா்த்தபோது 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.