மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

கோபி அருகே இளைஞரிடம் இருந்து ரூ.1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணம் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

கோபி அருகே இளைஞரிடம் இருந்து ரூ.1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தோ்தலின்போது வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனடிப்படையில், கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கன்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில் அந்தியூா் பகுதி கொங்காடையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் நாகராஜ் (18) வாழைக்காய் வியாபாரத்துக்காக உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.