மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image

பவானிசாகரை அடுத்த  தொட்டம்பாளையத்தில்  பண்ணாரி அம்மனை தரிசிக்கும் வகையில் தரையில்  படுத்து  நோ்த்திக்கடன்  செலுத்தும்  பக்தா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 12:51 am

பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொட்டம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனா். அம்மன் திருவீதி உலா நடைபெற்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பக்தா்கள் சாலையில் நெடுஞ்சாண்கிடையாக படுத்திருந்தனா். அப்போது பண்ணாரி அம்மன் சப்பரம் தரையில் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டியபடி திருவீதி உலா சென்றது. இவ்வாறு தரையில் படுத்திருந்த பக்தா்கள் மீது அம்மன் சப்பரம் தாண்டிச் சென்றால் பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.