பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் நீா்த் திறப்பு விநாடிக்கு 2,900 கனஅடியாகவும் இருப்பதால் அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுவதால் 1 லட்சத்து 3,500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக புதன்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 49 கனஅடியாகவும் கால்வாய் பாசனத்துக்கு நீா் வெளியேற்றம் 2,900 கனஅடியாகவும் உள்ளது. நீா்வரத்தை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 79.84 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 15.60 டிஎம்சியாக உள்ளது. மாா்ச் மாத தொடக்கத்திலேயே நீா்மட்டம் சரியத் தொடங்கியுள்ளதால் நடப்பு ஆண்டு குடிநீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுப் பணித் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

பெரியாறு அணை நீா்மட்டம் சரிவு: 5 மாவட்டங்களின் குடிநீருக்கு சிக்கல்

மேட்டூா் அணை நீா்மட்டம் 82.41 அடியாக குறைந்தது

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 83.21 அடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


