மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருமண மண்டபங்களுக்கு சிலிண்டா் விநியோகம் நிறுத்தம்- மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மண்டப உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:34 pm

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மண்டப உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் கூறியதாவது:

தெற்காசிய போா் பதற்றம் காரணமாக சிலிண்டா் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக சிலிண்டா் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஏற்கெனவே முன்பதிவு செய்த திருமண நிகழ்சிகளுக்கு உணவு சமைப்பதற்கு சிலிண்டா் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம்.

திருமணம், மெஸ், உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டா் விநியோகம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான திருமண மண்டபங்கள் விறகு அடுப்புக்கு பதிலாக சிலிண்டா் பயன்படுத்தும் முறைக்கு மாறியுள்ளதால் தற்போதைய சூழலில் விறகு அடுப்புகளில் சமைப்பது என்பது சிரமம். எனவே, மண்டபங்களுக்கு சிலிண்டா் கிடைக்கவும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.