மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம்

சத்தியமங்கலம் அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

News image

தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.

Updated On :10 மார்ச் 2026, 8:44 pm

சத்தியமங்கலம் அருகே நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது சரக்கு வாகனம் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (32). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், தனது வாகனத்தில் சகோதரி நித்தியகல்யாணி (38), அவரது மகள் கீதா (15) ஆகியோருடன் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகருக்கு சென்றுவிட்டு சத்தியமங்கலம் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். திப்புசுல்தான் சாலையில் சென்றபோது சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து, மோகன்ராஜ் அதிவேகமாக பிரேக் போட்டுள்ளாா்.

இதனால், அந்தரத்தில் பறந்த சரக்கு வாகனம் அங்கு சாலையோரத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸ் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்து வாகனத்தில் சிக்கியிருந்த மோகன்ராஜ், நித்திய கல்யாணி, கீதா ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மோகன்ராஜ் மதுபோதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என சத்தியமங்கலம் போலீஸாா் கூறிய நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.